Sun. May 5th, 2024

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 கடற்படையினருக்கு கொரோனா

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த 51 பேரும் கடற்படை வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு கடந்த 24 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் 51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் இவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்