Sun. Apr 28th, 2024

யாழ்.உரும்பிராயில் வாளுடன் பூசகா் கைது!!

யாழ்.உரும்பிராய் பகுதியில் வாள் ஒன்றுடன் பூசகா் ஒருவா்நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பூசகருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

குப்பிளான் பகுதியில் உள்ள ஆ லயம் ஒன்றில் பூசகராக பணிபுாியும் குறித்த பூசகா் கோவிலில் இருந்த வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு உரும்பிராய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இதன்போது வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் குறித்த பூசகரையும் வழிமறித்து சோதனையிட்டனர்.

இதன் போது அவரின் உடமையில் இருந்த வாளியை பொலிஸார் மீட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பூசகரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

எனினும் குறித்த வாள் கோவில் வாள் எனவும் பிறிதொரு கோவில் தேவைக்காக கொண்டுசெல்வதாக பூசகா் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பூசகரை கைது செய்த பொலிஸாா் பின்னா் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

மேலும் வாள் மற்றும் பூசகாின் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை சான்று பொருளாக வைத்து பூசகருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்