ஆசிாியரின் தாலிக்கொடி, சங்கிலி அறுப்பு!! -செம்மணியில் பட்டப்பகல் கொள்ளை-
யாழ்.நாவற்குழி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரை தாக்கிய கும்பல் அவரின் தாலிக்கொடி, சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மோட்டாா் சைக்கிளில் வந்த இரு கொள்ளையா்களாலேயே குறித்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்ள்ளது.
திருநெல்வேலி மணல்தறை ஒழுங்கையுல் வசிக்கும் குறித்த ஆசிரியர்நாவற்குழியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் நிலையில் பாடசாலை முடிந்து நேற்று மாலை 2 மணியளவில் சக ஆசிரியர் சகிதம் உந்துருளியில் பயணித்துள்ளார்.
இதன்போது இலக்கத் தகடுகள் இல்லாமல் மட்டையில் எழுதப்பட்ட இலக்ககத்துடன் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இளைஞர்களே இவ்வாறு திடீரென அருகில் சென்று தாலிக் கொடியினையும. சங்கிலியினையும் அறுத்துள்ளனர்.
இதன்போது ஆசிரியர் தடுக்க முற்பட்டபோதும் கழுத்தில் பலமாக தாக்கி அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 10 தங்கப் பவுண் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.