Sun. Apr 28th, 2024

இந்துக்களை மதமாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்!!

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதும் இந்துத் தெய்வங்களின் பெயரில் உள்ள வீதிகளை கிறிஸ்தவ மற்றும் பொதுப் பெயர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இந்து சமய அதியுயர் குருபீடங்கள் அது உயர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து குறித்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கைத் தீவின் வடபகுதியில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.

மேலும் இந்துப் பிரதேசங்களில் கிறிஸ்தவ சிலைகளை நிறுவும் செயற்பாடுகளும், இந்துக்களின் பூர்வீகப் பிரதேசங்களை இந்துக்கள் அல்லாத பிரதேசங்களாக பெயர் மாற்றம் செய்யும் செயற்பாடுகளும் நடக்கின்றன.

இதுமட்டுமல்லாமல் இந்து ஆலயங்களுக்கும் திருவுருவங்களுக்கும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும் ஒரு பகுதி கிறிஸ்தவ பாதிரிமார்களாலும் அவர்கள் சார்ந்த திருச்சபைகளினாலும் அவர்கள் சார்ந்தவர்களாலும் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டு வருவது ஆழ்ந்த வேதனைக்குரியதாகும்.

அவை வடபகுதியில் இந்து கிறிஸ்தவ நட்புறவையும் நல்லிணக்கத்தையும் மிக மோசமாக பாதிக்கும் செயல்கள் ஆகும்.

மேற்படி விடயங்களை குறித்த கடிதத்தில் குறிப்பிட்ம், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே அக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் அனைத்து இந்து குருபீடங்களும் நிறுவனங்களும் இணைந்து ஒப்பமிட்டு இக் கடிதத்தினை அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்