Sun. Apr 28th, 2024

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!! -யாழ்.அச்செழுவில் இன்று காலை சம்பவம்-

யாழ்.அச்செழு பகுதியில் பாடசாலை ஒன்றுக்குள் பு குந்த கும்பல் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத் தியுள்ள நிலையில் சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.

பழைய மாணவர்கள் சிலருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த பழைய மாணவர்கள் 5 பேர், ஆசிரியரின் கையிலிருந்த பாடப்புத்தகங்களைப் பறித்து வீசி எறிந்துள்ளனர்.

அத்துடன், ஆசிரியரின் கழுத்தை நெரித்து தள்ளிவிட்ட பழைய மாணவர் ஒருவர், அவரை பாடசாலையிலிருந்து வெளியேறுமாறு மிரட்டி தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரால் பழைய மாணவர்களுக்கு எதிராக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இருப்பினும் பின்னர் சமாதானமாகச் செல்வதாக முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளது என்று பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்