ஜனாதிபதி அலுவலகத்தை வார இறுதி நாட்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்!!
ஜனாதிபதி அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பொதுமக்களுக்கு பார்வையிட முடியும்.
அத்துடன், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட வருபவர்கள் புகைப்படம் எடுக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஜனாதிபதியின் ஊடகப்பிரி வெளியிட்டுள்ளது.