Sun. Apr 28th, 2024

கொரோனா வைரஸ் பீதி!! -வெறிச்சோடிய பாடசாலைகள்-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொடர்பிலான அச்சத்தால் மட்டக்களப்பில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாமல் விட்டாமல் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியமையை தொடர்ந்து அப்பகுதி மக்களிடத்தில் அச்சம் நிலைமை தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த தகவலினால் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகர் பாடசாலைகளுக்கும் மாணவர்கள் செல்லவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்