இலங்கையர் ஒருவரை தாக்கிய கொரோனா!! -அச்சத்தில் மக்கள்-
உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அங்கொடையில் அமைந்துள்ள I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இத்தாலி பிரஜைகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 3 ஆயிரத்து 136 பேர் பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 ஆயிரத்து 149 பேர் பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.