Sun. Apr 28th, 2024

யாழ்மாவட்ட இளையோருக்கான கூடைப்பந்தாட்ட தொடர் அசுர வேகத்தில் HFC சம்பியனாகியது

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் தமது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 15 வயதுப் பிரிவு பெண்களுக்கான போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை அணியை எதிர்த்து யாழ் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் தமது அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய
யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை அணியினர் ஆட்ட நேர முடிவில் 39:06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதில் 18 அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் எஸ்.சகாஜராஜா கலந்து சிறப்பித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்