Sat. May 4th, 2024

யாழ்பீச்சில் மோதல் ஒருவர் படுகாயம்

மது போதையில் இரு குழுக்கள் மோதியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  யாழ்பீச் ஹோட்டல் தற்காலிகமாக  பொலீஸாரால் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று திங்கட்கிழமை  இரவு 10.45 மணியளவில் யாழ்பீச் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  யாழ்பீச் ஹோட்டல் பொலீஸாரால் மூடப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
முதலில் 4 பேர் அடங்கிய குழு யாழ்பீச் ஹோட்டலில் மது அருந்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் மூவர் மீண்டும் திரும்பவும் மது அருந்த வந்து பெரிய சத்தம் போட்டு ஏசி தங்களை எவரும் ஒன்றும் செய்ய முடியாது என சத்தமிட்டுள்ளனர். இதனை அங்கே மது அருந்திக் கொண்டிருந்த குழுவினர் தங்களுடன் இவர்கள் முரண்பாட்டுக்கு அழைப்பதாக நினைத்து வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவத்தையடுத்து கைகலிப்பில் ஒருவர் மது போத்தலை உடைத்து இன்னொருவரின் வயிற்றில் குற்றியதாக தெரியவந்துள்ளது. குறித்த நபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்