Sat. Apr 20th, 2024

இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தமது அங்கத்துவ கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3.30 மணிக்கு  பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.

இதன் இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் அணியை எதிர்த்து வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் உப தலைவர் இ.பரமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிர்வாச் செயலாளர் தி.வரதராஜன்,  சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சி.நிசாந்தன், பருத்தித்துறை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரும் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் தலைவருமான தி.கார்த்திகேசன், சூரியமகால் திருமண மண்டப உரிமையாளர் உதயராசன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்