Sun. May 5th, 2024

யாழில் 1729 பேர் தனிமைப்படுத்தலில் ,இரு கிராமங்களில் 380 வீடுகள் முடக்கம்

யாழ். மாவட்ட செயலர்
வெளியிட்ட  தகவல்
1729 பேர் தனிமைப்படுத்தலில் ,இரு கிராமங்களில் 380 வீடுகள்
முடக்கப்பட்டுள்ளார்கள்

யாழ்.மாவட்டத்தில் 1729 நபர்கள்
தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். 192 நபர்கள் அரியாலை
தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டிருக்கின்றனர். 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு
கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மேலும் யாழ் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்கள் விழிப்புணர்வு
ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஷன் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலமை தொடர்பாக ஊடகங்களுக்கு 23/3/2020  மாலை கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர்
கூறுகையில், யாழ். மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன்
இனங்காணப்பட்டிருக்கின்றார்.
இதனடிப் படையில் 1729 பேர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,
அரியாலை பகுதியில் மட்டும் 192 நபர்களும் 80 வீடுகளும்
தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இருக்கின்றது.
அதேபோல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவடி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. மேலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் விழிப்புணர்வுடன்
செயற்படுவதால்
நோய் பரவலை தடுக்கலாம். அதேபோல் ஊரடங்கு மேலும் 2
அல்லது 3 வாரங்களுக்கு
நீடிக்கப்படலாம். எனவே மக்கள்
அவதானமாக இருக்கவேண்டும்.
தமக்கு தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலர் ஊடாக தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பக பொருட்களை விநியோகம்
செய்ய 23/3 காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், அத்தியாவசிய உணவு
பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை
இனங்கண்டிருக்கிறோம். அவர்களுக்கு உலர் உணவு
விநியோகிக்க நடவடிக்கை
எடுத்திருக்கிறோம். மேலும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு
ஊடாக 1 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. மேலும் பிரதமர் ஊடாக மாவட்டத்திற்கு 1 மில்லியன் வழங்கவும் இணக்கம்
காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான
உதவிகள் கிடைக்கும். மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்