Mon. Apr 29th, 2024

யாழில் கோட்டாவின் சுவரொட்டிகளை அச்சுறுத்தி ஒட்டும் அடிவருடிகள்!!

கோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வ.பார்த்தீபன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்:-

நேற்று இரவு கோத்தாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீடுகளின் மதில்களில் ஒட்டிவந்தனர். அதன் தொடர்ச்சியாக எனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது நான் அதனை எதிர்த்தேன் .

யாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு, அவர்கள் யாரிடம் கேட்க வேண்டும் மிரட்டல் தொனியுடன் மிரட்டினர்.

சுவரொட்டிகளையும் அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியுடனும் மீண்டும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர்.

இருப்பினும் அதற்கு நான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர்.

ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டன.

நான் அவர்களுக்கு மரியாதையாகத்தான் கூறினேன், சுவரொட்டிகளை எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று. ஆனால் அவர்கள் அதிகார வெறியுடன் செய்து காட்டுவோம் என்ற மிரட்டல் பாணியுடன் யாரும் இல்லாத பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

தேர்தல்காலம் என்றால் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள்தான். ஆனால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற வகையில் உரிமையுடன் எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று மரியாதையாக சொன்னபோதும் யாரிடம் கேட்கவேண்டும் ஒட்டுவதற்கு என்று மிரட்டிவிட்டு சென்று விட்டு பின்னர் பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டியது அவர்களின் அதிகார வெறியினை வெளிப்படுத்தி நிற்கின்றது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்