வல்லிபுர கோயிலால் வந்தவர்கள் மீது இளைஞர் குழு தாக்குதல்
திங்கள் இரவு வல்லிபுர கோயிலுக்குச் சென்று திரும்பி வரும்பொழுது இரவு 7 மணி அளவில் ஆனைவிழுந்தான் பகுதிக்கு அண்மித்த வைரவர் கோவில் பகுதியில் 30 பேர் கொண்ட இளைஞர்கள் நீங்கள் அந்தவழியால் சென்றவர்களை எங்கிருந்து வருகிறீர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் கேட்கும் மிரட்டி உள்ளது. அந்த வழியால் வந்த பாதிக்கப்படடவர்கள் தாங்கள் குஞ்சர் கடை பகுதியை அண்மித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிய போது தங்களை தாறுமாறாக தாக்கியதாகவும், வந்த ஒருவரிடம் ஒன்றரை பவுன் சங்கிலியை அறுத்தும் நான்கு தொலைபேசி மற்றும் கைக்கடிகாரம் ஒன்றையும் எடுத்துள்ளார்கள். பாதிக்க பட்டவர்கள் காயங்கள் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் பருத்துறை போலீசார் விசாரணையை ஆரம்பித்து உள்ளார்கள்