Sun. Apr 28th, 2024

யாழின் நாயகன் உதைபந்தாட்ட தொடரில் துணவி சென்நியூஸ்ரார் மற்றும் காரைநகர் தோப்புக்காடு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி

யாழின் நாயகன் உதைபந்தாட்ட தொடரில் துணவி சென்நியூஸ்ரார் மற்றும் காரைநகர் தோப்புக்காடு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில்  நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட “யாழின் நாயகன்” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில்  சென்யூஸ்ரார் அணியை எதிர்த்து உரும்பிராய் உதயசூரியன் அணி மோதியது. இதில் சென்நியூஸ்ரார் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் காரைநகர் தோப்புக்காடு அணியை எதிர்த்து யூனியன்ஸ் அணி மோதியது. கோல் மழை பொழிந்த காரைநகர் தோப்புக்காடு அணி 9:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்