மூன்று மாதங்களின் முன்னர் சங்கிலி அறுத்த திருடனை பிடித்த நெல்லியடி பொலிஸார்
18.06.2020. அன்று மூன்று மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி பகுதியில் மதிய வேளையில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி வீதிக்கு அருகில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் 5 பவுன் சங்கிலி அறுத்து செல்லப்பட்டிருந்தது. அந்த பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். மூன்று மாதங்களின் பின்னர் இன்று நெல்லியடி பொலிஸார் ஒரு சந்தேகநபரை கைது செய்துள்ளார்கள். தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாளைய பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.