இமையாணன் மேற்கு கிராமத்தை சேர்ந்த நபர் சவுதியில் கோரோனோ தொற்றுக்கு பலி
இமையாணன் மேற்கு கிராமத்தை சேர்ந்த அரசன் செல்வராஜா வயது 51 ஒரு பிள்ளையின் தந்தையான இவர் சவுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சவுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார். இவர் மூன்று வருடங்கள் அங்கு வேலை செய்துவிட்டு சொந்த ஊர் இமையாணன் மேற்கிற்கு விடுமுறையில் வந்து ஐந்து மாதங்களுக்கு முன் தான் சவூதிக்கு திரும்பியிருந்தார். சவுதிக்கு இவர் வேலை செய்த நிறுவனம் நேற்று 16ஆம் தேதி இவர் உயிர் பிரிந்ததாக அவருடைய துணைவியாருக்கு அறிவித்துள்ளார்கள். இவர் இமையாணன் மேற்கில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தவர்.இவருடையஇழப்பு இமையாணன் மேற்கு கிராமத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.