கடற்படையினரை தாக்கிய சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை
யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கியதாக தெரிவித்து அப்பிரதேசத்தில் கடற்படையினர் சுற்றி வளைத்து அப்பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கடந்தயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர் சார்பில். சட்டத்தரணி மணிவண்ணன் இன்றைய ஊர்காவற்துறைநீதிமன்றத்தில் ஆஜராகிகுறித்த மூவருக்கும் குறித்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்து விண்ணப்பத்தினை முன்வைத்தபோது ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியது.