Fri. Apr 26th, 2024

முல்லைத்தீவு விளையாட்டு வீரர்கள் கெளரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில்
2022ம் ஆண்டுக்கான  சாதனைபுரிந்த விளையாட்டு வீரர்களை கெளரவப் படுத்தும் வர்ண இரவு நிகழ்வு கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட விளையாடுத்துறையில் மாகாண மட்டம் மற்றும்  தேசிய பாடசாலை போட்டிகளில் சாதனை புரிந்த    முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட விளையாட்டு வீரர்களை ஊக்கபடுத்தி முன்னேற்றும் நேக்குடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவின் ஒழுங்குபடுத்தல்களுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி)
சி. குணபாலன்  அவர்கள் தலைமையில்  மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றது.
141 சாதனை வீரர்கள் மற்றும்  இவர்களை பயிற்றுவித்த பயிற்றுநர்கள் 12 பேர் உட்பட 153 பேருக்கான பரிசில்கள் மற்றும் வர்ண இரவு நிகழ்வை நடத்துவதற்கான   முழுமையான நிதி அனுசரணையை முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் முல்/குமுழமுனை(கனடா) அவர்கள் நிகழ்வை சிறப்பாக நடைபெற  வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்/அரச அதிபர் க. விமலநாதன்  அவர்களும் சிறப்பு விருந்தினராக
சுகாதார வைத்திய அதிகாரி(MOH)
K.சுதர்சன், துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர் மாலதி முகுந்தன் அவர்களும், கெளரவ விருந்தினராக ஓய்வு பெற்ற மருத்துவமாது
செல்வி.க அஞ்சலிதேவி, SKY Assistant proefssor p.பிரணவன் அவர்களும் கலத்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்