Thu. May 2nd, 2024

முகநூலில் நிர்வாணப் படம் – கப்பம் கோரிய 4 பேர் கைது

இளைஞனின் நிர்வாண படத்தை முகநூலில் பதிவிடப் போவதாக கூறி கப்பம் கோரிய கோப்பாயைச் சேர்ந்த 4 பேரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெண் ஒருவரின் பெயரில் போலியான முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்து இளைஞருடன் நட்புறவாடினர். குறித்த இளைஞர் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர். அவரை கோப்பாய் பகுதிக்கு வருமாறு அழைத்து வீட்டில் பூட்டி வைத்து நிர்வாணமாக படமெடுத்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபரிடம் நிர்வாணப் படத்தை முகநூலில் பதிவேற்றாமல் இருக்க 2 லட்சம் ரூபா பணம் கோரியுள்ளனர். அவரும் கொடுத்துள்ளார். அதன் பின்னர் நேற்று முன்தினமும் குறித்த நபரிடம் மேலும் 5 லட்சம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளது. அதனை செலுத்த முடியாத இளைஞர் கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  குறித்த இளைஞரின் முறைப்பாட்டிற்கமைய இளம் தம்பதியினர் இருவர் அவர்களின் சகோதரர்கள் இருவர் என 4 பேரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்