Sun. Apr 28th, 2024

மீன் வியாபாரிக்கு திக்கத்தில் வெட்டு

பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் சந்தியில் மீன் வியாபாரி ஒருவரை மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் வெட்டியதில் மீன் வியாபாரி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை  காலை திக்கம் சந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் அல்வாய் வடமேற்கு அல்வாய் திக்கம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ராசநாயகம் (வயது 44) என்பவரே வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று  காலை திக்கம் சந்தியூடாக மீனுடன் நெல்லியடி நோக்கி பயணித்த வேளை மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் குறித்த நபரின் கைகள், மற்றும் கால்கள் பகுதிகளில் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்