பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் தவறான முடிவால் மரணமாகியுள்ளதாத தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்த தனுஜா எனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவியே தவறான முடிவெடுத்து இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்து பல்கலைக்கழகம் செல்வதாக கூறி பல்கலைக்கழக தங்குமிடத்திற்கு வந்த மாணவி கதவை உள்பக்கமாக பூட்டிய நிலையில் காற்றாடியில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.