மாலைசந்தையான் ஆலயத்தில் ஒருவருக்கு மட்டுமே தொற்று
மாலைசந்தையான் பிள்ளையார் ஆலயத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாலைசந்தையான் பிள்ளையார் ஆலயத்தில் அண்மையில் 79 பேருக்கு பிசிஆர் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் நேற்று 4 பேரின் முடிவுகள் வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகியது. இதில் மாலைசந்தையான் பிள்ளையார் ஆலயத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.