பருத்தித்துறை சுகாதார பிரிவில் 16 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார பிரிவில் பருத்தித்துறையில் முடக்கப்பட்ட பகுதி மற்றும் பருத்தித்துறை நகரப் பகுதி வியாபாரிகள் உட்பட 395 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட வேலணை சுகாதார பிரிவில் 14 பேருக்கும், யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 25 பேருக்கும், கோப்பாய் சுகாதார பிரிவில் இருவருக்கும், தெல்லிப்பளை சுகாதார பிரிவில் 3 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் 3 பேருக்கும் என 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.