மாந்தை கிழக்கில் குடிநீருக்கு அலையும் மக்கள்!! -வாட்டும் வரட்சியின் கொடூரம்-
முல்தை;தீவு மாவட்டம் மாந்தை கிழக்கிற்கு உட்பட்ட மல்லாவி மற்றும் துணுக்காய் உள்ளிட்ட பல பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக சுமார் 572 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வரட்சி காரணமாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.