Thu. May 2nd, 2024

அதிக வேகம் காரணமாக அநியாயமாக பலியான இளைஞர் – ஓமந்தையில் சம்பவம்

வவுனியா ஓமந்தை மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலமோட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் பிரிந்தன் (வயது 20) என்ற இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் இரவு 11 மணியளவில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் இறம்பைகுளம் சந்தியிலிருந்து, பாலமோட்டையில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்துகொண்டிருந்தார். மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் அதிக வேகமாக சென்று கொண்டிருருந்த போது கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் குறித்த இளைஞர் தூக்கிவீசப்பட்டார்.

அம்புயூலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டபோதும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட முன்னமே இளைஞர் மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்