மஹேல ஜெயவர்தன வாக்குமூலம் வேறொரு திகதியில் , திடீரென மாற்றிய அதிகாரிகள்
உலகக்கோப்பை இறுதியாட்டம் தொடர்பான ஆட்டநிர்ணயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சமூகமளித்திருந்த இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன , தனது வாக்குமூலம் வேறொரு தேதியில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்
ஊடகங்களுடன் பேசிய அவர், வாக்குமூலம பதிவு செய்ய அவருக்கு மற்றொரு தேதி வழங்கப்படும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.