Fri. May 17th, 2024

9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சங்கா

உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பகிரங்கமான குற்றஞ்சாட்டினையடுத்து விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு சம்பந்த பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுவருகிறது. விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இன்று சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் .
பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார விசாரணைகள் முடிவடைந்ததும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுகள் மீதான உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என நான் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார். இதன் போது ஐ.சி.சி தலைவர்பதவிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சங்கக்கார, இல்லை, அப்பதவிக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன, எனினும் தற்போது நான் ஐ.சி.சி தலைவர்பதவி குறித்து சிந்திக்கவில்லை அதனைவிடமுக்கியமான வெறு ஒரு விடயம் எனக்கு உள்ளது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்