Fri. Apr 26th, 2024

பொட்ஸவானாவில் 360 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமானமுறையில் பலி

கடந்த மூன்று மாதங்களில் பொட்ஸவானாவில் 360 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான சூழ்நிலையில் இறந்துவிட்டதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில இறந்த யானைகளின் சடலங்கள் நீர்நிலைகளை சுற்றி கொத்தாக காணப்பட்டதாகவும் மற்றவைகள் முகம் குப்புற விழுந்த நிலையில் இறந்து கிடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் .
அருகில் காணப்பட்ட உயிருள்ள யானைகள் கூட உடல் ரீதியாக பலவீனமாகத் இருக்கின்றன என்றும் மேலும் ஒரு யானை வட்டமாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்றும் , அதனால் திசையை மாற்ற முடியவில்லை என்றும் இதை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வேறு எந்த மிருகங்களோ அல்லது வேறு உயிரினங்களோ எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக்கவில்லை என்றும் யானைகள் மாத்திரமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்
பொட்ஸவானா அரசு இறந்த யானைகளிடமிருந்து மாதிரிகளை பரிசோதித்து வருகிறது, ஆனால் இறப்புக்கான காரணத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்