நெல்லியடி நகரில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை
இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி அளவில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை நெல்லியடி நகரில் ஆரம்பமானது. தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுத்து இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க, நம்மை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட, எமது உரிமைகளை வென்றெடுக்க உங்கள் வாக்குகளை எனக்கு தாருங்கள் என்று அறைகூவல் விடுத்து பிரசாரம் இடம்பெற்றது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் ஒவ்வொரு மக்களையும் சந்தித்து தங்களை ஆதரிக்குமாறு துண்டுப் பிரசுரமும் வழங்கியுள்ளார்கள். அவர்கள் சென்ற இடமெல்லாம் முதலமைச்சர் எப்பொழுது வருவார் என ஆவலோடு எதிர்பார்க்கின்றோம் என மக்கள் அறைகூவல் விடுத்தார்கள்.