Sun. May 5th, 2024

மன்னார் பிரிமீயர் லீக்’ சுற்றுப் போட்டி -8 ஆம் நாள் சுற்றில்   எஸ்.எல்.எப் மற்றும் ஈடன்  எப்.சி  கழகங்கள் சம நிலையில்

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 7 ஆம் நாள் போட்டிகள் நேற்று திங்கட்கிழமை (24)  இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-குறித்த போட்டிக்கு பிரதம விருந்தினராக மன்னார் நகர சபை உறுப்பினர் கொலின்டன் (ராஜன்) கலந்து கொண்டார்.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது  எஸ்.எல்.எப். எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும்  ஈடன்  எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும்   இடையில் போட்டி இடம் பெற்றது.
இதன் போது 21 ஆவது நிமிடத்தில் ஈடன்  எப்.சி உதைபந்தாட்ட அணி வீரர் ஏ.நியூட்டன் ஒரு கோலை அடித்தார்.அதனை தொடர்ந்து 40 ஆவது நிமிடத்தில்  எஸ்.எல்.எப். எப்.சி உதைபந்தாட்ட அணி வீரர் ஜே.எடிசன்  ஒரு கொலை அடித்தார்.
இரண்டு உதைபந்தாட்ட அணிகளும் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சம நிலையில் போட்டி முடிவடைந்தது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்