‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-குறித்த போட்டிக்கு பிரதம விருந்தினராக மன்னார் நகர சபை உறுப்பினர் கொலின்டன் (ராஜன்) கலந்து கொண்டார்.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது எஸ்.எல்.எப். எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும் ஈடன் எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும் இடையில் போட்டி இடம் பெற்றது.
இதன் போது 21 ஆவது நிமிடத்தில் ஈடன் எப்.சி உதைபந்தாட்ட அணி வீரர் ஏ.நியூட்டன் ஒரு கோலை அடித்தார்.அதனை தொடர்ந்து 40 ஆவது நிமிடத்தில் எஸ்.எல்.எப். எப்.சி உதைபந்தாட்ட அணி வீரர் ஜே.எடிசன் ஒரு கொலை அடித்தார்.
இரண்டு உதைபந்தாட்ட அணிகளும் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சம நிலையில் போட்டி முடிவடைந்தது