10 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்த 10 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரட்டுக்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர் 23 வயதுடைய வெல்லம்பிட்டி பகுதியைச்சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.