மகாஜனாக் கல்லூரி 4 பதக்கங்களை அள்ளியது
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளத் தொடரில் கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 4 பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று புதன்கிழமை வரை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த விஜயகுமார் ஜதுஸ்ரிக்கா 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், அதே வயதுப் பிரிவில் சந்திரகுமார் தீபிகா 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும்,
18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் சிவபாதம் சுவர்ணா 2.70 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும்,
18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சந்திரகுமார் துசாந்தன் 3.80 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.