இலங்கை மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக மகாஜனக் கல்லூரியின் மாணவி பாஸ்கரன் சானு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சார்க் நாடுகளுக்கான கால்பந்தாட்ட தொடரில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி மகாஜனாக் கல்லூரி மாணவி விளையாடவுள்ளார். இவர்களுக்கான பயிற்சிப் போட்டிகள் தற்போது இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றது. வடமாகாணத்திலிருந்து இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.