Tue. Apr 30th, 2024

தேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறை தண்டனைக்குரிய குற்றம்

தற்பொழுது அமுலில் உள்ள ‘அமைதியான காலத்தில்’ தேர்தல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக இந்த சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோதே இதனை குறிப்பிட்டார்.

இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளபடுகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரச்சாரத்தையும் வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் இந்த வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், ‘அமைதியான காலத்தை’ மீறுவது சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்