Tue. Apr 30th, 2024

மகள் இழந்த துயரம் தாங்காமல் தந்தை உயிரிழப்பு

மகளின் இழப்பை தாங்க முடியாமல் தந்தையும் உயிரிழந்த சம்பவம் மாதா கோவிலடி, துன்னாலை வடக்கில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ஈஸ்வநாதன் யோகேஸ்வரி (வயது- 61) என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) முற்பகல் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மகளின் இழப்பை தாங்கிக் கொள்ளாத தந்தையான வல்லி இரத்தினம் (வயது- 88) என்பவர் இரவு உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(11) இருவரதும் இறுதிக் கிரியைகள் துன்னாலை வடக்கில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்