புளியமரம் வீழ்ந்து சிறுவன் பலி
வெட்டப்பட்ட புளிய மரம் ஒன்றில் சிக்கி 11 வயதுடைய சிறுவன் ஒருவன் சம்பவிடத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று மீகஹகிஹுல, கெசெல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கந்தகெடிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் மீகஹகிஹுல, கெசெல்வத்த கிராமத்தை சேர்ந்த சமித் உதயகுமார என்ற 11 வயதுடைய சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.