Fri. May 17th, 2024

விபரீத முடிவு எடுத்து இளைஞன் பலி

வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
22 வயதுடைய ரஞ்சித் வசந்த் என்ற இளைஞன் திருமணம் முடிந்து, மனைவியுடன் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கை பகுதியில் வசித்து வருகின்றார்.
குறித்த இளைஞனின் மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக காணப்படுவதினால் அவர் நேற்று  காலை நெடுங்கேனி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனிமையில் குறித்த இளைஞன் இருந்துள்ளார்.
மாலை 5.00 மணியளவில் இளைஞனின் சகோதரன் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட சமயத்தில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதினை அவதானித்துள்ளார். வவுனியா பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்