Sat. Apr 20th, 2024

கன்னட திரையுலகை புயலாக உலுப்பும் போதைப்பொருள் பாவனை விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது

கன்னட திரையுலகை புயலாக உலுப்பும் போதைப்பொருள் பாவனை விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் பிரபல நடிகையாக உள்ள நிக்கி கல்ராணியின் சகோதரியே சஞ்சனா கல்ராணி.
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கன்னட திரை உலகில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். ராகவா லாறன்ஸ் என்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்