Mon. Apr 29th, 2024

பிறந்த நாள் கொண்டாடிய பெண் கைது

வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளதுடன் சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் அனுமதியின்றி பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்த பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளதுடன் சத்தமாக போடப்பட்ட பொக்ஸ் என்பவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அனுமதியின்றி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடாத்துவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட போது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதனால் பிறந்த நாள் நிகழ்வை  ஏற்பாடு செய்த பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளதுடன் பொக்ஸ் என்பவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்