Tue. May 7th, 2024

பிரதேச சபை சந்தைகள் தவிர்ந்து கோழி இறைச்சி விற்பதில் சிக்கல்??

19.11.2020 இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டம் காலை 10 மணிக்கு தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகள் தவிர வேறு இடங்களில் கோழி இறைச்சி விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்ட நிலையில் பல இடங்களிலும் விற்பனை செய்வதாக பிரதேச சபை உறுப்பினர்கள் சபையில் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். மேலும் இந்த  கழிவுகள் ஒழுங்கான முறையில் அகற்றுவது இல்லையெனவும் சபையில் உறுப்பினர்களால் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டது.

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்