Sun. May 19th, 2024

போரில் இறந்தவர்களை அனுஸ்டிப்பவர்கள் 23ம் திகதி நீதிமன்றில் ஆயர்

வடமாராச்சி பகுதியில்  போரில் இறந்தவர்கள் தினத்தை அனுஸ்டிப்பவர்களை கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலீஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிணங்க பருத்தித்துறை நீதின்றால் எதிர்வரும் 23ம் திகதி நீதிமன்றில் ஆயராகுமாறு இன்று(19) கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நகரசபை உறுப்பினர் பரமேஸ்வரன் சுரேஸ் உட்பட்ட ஐவர் மீது கைது செய்வதற்கான உத்தரவை பெற இன்று நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிணங்கவே எதிர்வரும் 23.11.2020 அன்று நகரசபை உறுப்பினர் ஆயாராகுமாறு கட்டளை அனுப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை முனைப்பகுதியில்  இறந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு நாடத்தியதை அவதானித்த பொலிஸ் அதற்கு பொறுப்பானவர்களை இலக்கு வைத்து தனது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்