மல்லாகத்தில் வீடு புகுந்து தாக்குதல், இருவர் படுகாயம்
மல்லாகம் நீலியம்பனை பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த இருவரை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை நாலு 30 மணியளவில் இடம்பெற்றதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்தனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.