இலங்கையில் இளம் பெண் உட்பட 4 பேர் பலி
இலங்கையில் இன்றும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இளம் பெண் உட்பட 4 பேர் மரணம் அடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கொழும்பு 10ஐ சேர்ந்த 70 வயதுடைய ஆண், கொழும்பு 15ஐ சேர்ந்த 27 வயதுடைய பெண், களுத்துறையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண், களுத்துறையைச் சேர்ந்த 86 வயதுடைய பெண் ஆகியோரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பலியாகியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.