Mon. Apr 29th, 2024

பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவினை நியமித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமித்து வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பிரான ஜயந்த கெட்டகொட எம்.பி பதவியை நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இராஜினாமா செய்தார்.
அதனையடுத்து, அவரது இடத்திற்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரின் பெயர் இன்று வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. இதையடுத்து பசில் ராஜபக்ஷநாளையதினம் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்