பாரதி வித்தியாலய 24 மாணவர்களுக்கு குளவி கொட்டியது.
முல்லைத்தீவு விசுவமடு பாரதி வித்தியாலயத்தில் 24 மாணவர்கள் குளவி கொட்டிய நிலையில் மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இணைய வசதிகளற்ற மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலையான முல்லைத்தீவு விசுவமடு பாரதி வித்தியாலயத்தில் சென்ற போதே குளவி கொட்டியதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.