Sat. May 4th, 2024

பாணின் விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் புதன்கிழமையே

யாழ் மாவட்டத்தில் பாணின் விலை குறைப்பது தொடர்பான தீர்மானம் நாளை மறுதினம் புதன்கிழமையே எடுக்கப்படவுள்ளதாக யாழ்மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஏனைய பிரதேசங்களை விட யாழ் மாவட்டத்தில் பாணின் விலை இதுவரை குறைவாகவே விற்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பது தொடர்பாக நாளை மறுதினம் புதன்கிழமை கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கலந்துரையாடலின் பின்னரே பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலை குறைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கபடும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்