Sat. May 18th, 2024

நாளை மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை  செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பிரதேசத்தில்
பிரிட்டிஷ் கவுன்சில் ரக்கா வீதி, இயற்கை விஞ்ஞான பீடம், விஞ்ஞான பீடம், தியாகி அறக்கொடை நிலையம், றியோ கிரீம் ஹவுஸ், அரசடி பழம் வீதி, கைலாச பிள்ளையார் கோவில், நல்லூர் கோயில், நாவலர் வீதி, இராசாவின்தோட்டம், பருத்தித்துறை வீதி, ரக்கா வீதி – சுண்டிக்குளி, கோயில் வீதி சந்தி, இராமநாதன் வீதி, புகையிரத குறுக்கு சந்தி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் நெளுங்குளம் நீர் வழங்கல் சபை, றந்தெனிய கல்லுடைக்கும் ஆலை, அறுகம்புல்வெளி, அவறந்துலாவ, நவகம்மானே, பாவற்குளம், பாரதிபுரம், கூமாங்குளம், மறக்கறம்பளை – கணேசபுரம், நாகரிலுப்பைக்குளம், நெளுக்குளம் கலைமகள் பாடசாலையடி, நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய, பழையனூர், பாண்சின்னகுளம், பாவற்குளம், பெரியஉளுக்குளம் தீவரகம, பொன்னாவரசங்குளம், இராஜேந்திரகுளம், சாம்பல்தோட்டம் வீட்டுத் திட்டம், சூடுவெந்தபுலவு தொலைத்தொடர்பு கோபுரம், சூடுவெந்தபுலவு, துடாரிக்குளம், ட்ராக் 07, உளுக்குளம், உளுக்குளம் எல்.பி. குடியிருப்பு, விநாயகபுரம் வீட்டுத் திட்டம் ஆகிய பிரதேசங்களிலும்  மி்ன் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்