Wed. May 1st, 2024

பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கு சென்ற கல்வி அதிகாரி விபத்தில் பலி ;கைதடியில் துயரம் !

தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியும் மட்டுவில் வடக்கை சொந்த இடமாகவும் கோண்டாவில் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) விபத்தில் உயிரிழந்துள்ளார் .

கைதடி கோப்பாய் வெளியில் நேற்று 11.04.2024 வியாழன் பாடசாலை விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றதில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனினறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

உடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்து நாகரிகம் தமிழ் பாடங்களை உயர்தர மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிறந்தவராக விளங்கினார்.

இவரின் தீடிர் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்