Fri. May 3rd, 2024

பருத்தித்துறை விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சையிக்கிளும் விபத்திற்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் தும்பளை தெற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த மரிய பெர்ணாண்டோ (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை வீதி கிராமக்கோடு சந்தியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சையிக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மரிய பெர்ணாண்டோ தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்